இலங்கை

விலை அதிகரிப்பு!! – பட்டியலில் புதிதாக இணைந்தது பொலித்தீன்

Published

on

நாட்டில் பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொலித்தீனுக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதா காரணமாகவே இவ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பொலித்தீன் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது, இதுவே இவ் விலை அதிகரிப்புக்கு முக்கிய கரணம் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் எரிவாயு, சிமெந்து, அரிசி, சீனி உள்ளிட்ட பல புஒருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து செல்கின்றன. நட்டு மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கடசிகள் இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பொலித்தீன் விலையில் இவ் விலை அதிகரிப்பு பட்டியலில் புதிதாக இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version