இலங்கை

கொத்து ரொட்டியால் மோதல்! – இளைஞர் அடித்து கொலை

Published

on

காலி பத்தேகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்கச் சென்ற இளைஞர் உணவக உரிமையாளரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தேகம, நாகொட பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்குவதற்காக குறித்த இளைஞர் சென்றுள்ளார்.

அப்போது இளைஞருக்கும் உணவக உரிமையாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த இளைஞர் வெளியே தனது வீடு சென்று கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து வந்து உணவக உரிமையாளரை தாக்கியுள்ளார்.

அதன் காரணமாக ஆத்திரமடைந்த உணவக உரிமையாளரும் அவரது மகனும் இணைந்து குறித்த இளைஞரை உலக்கையால் அடித்து தாக்கியுள்ளது.

இதனால் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளரின் மகனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version