இலங்கை

அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழி பாடநெறி

Published

on

சப்ரகமுவ மாகாணத்தில் கடமையாற்றும் சிங்கள மொழி அரச சேவையாளர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண பிரதி பிரதான செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இரத்தினபுரி புஸ்சல்ல பயிற்சி நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை சப்ரகமுவ மாகாண ஆளுநர் சென்று நேரில் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் ஊழியர்கள் மத்தியில் தமிழ் மொழியிலும் உரையாற்றியுள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version