இலங்கை

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை நீடிப்பு

Published

on

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் தற்போதைய வயதெல்லையை அதிகரிக்க தயாரிக்கப்பட்ட சட்டவரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க சட்டவரைபு ஒன்று தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி தயாரிக்கப்பட்ட சட்டவரைபு பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆடைக் கைத்தொழிற்றுறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் விடங்கள் பற்றி ஆராயும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுவில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைய முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்தில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயதாக நீடிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்று பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கு இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கி இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதில் திருத்த சட்டவரைபை நாடாளுமன்றில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version