இலங்கை

பெரும்போக உரம் நாளைமுதல் விநியோகம்!

Published

on

பெரும்போகத்துக்கு தேவையான கரிம மற்றும் சேதன உரங்களை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை 13ஆம் திகதி முதல் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அம்பாறை, அநுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு உர விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version