இலங்கை

மன்னாரில் 21இல் 90 பாடசாலைகள் ஆரம்பம்

Published

on

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மடு கல்வி வலயத்தில் 44 பாடசாலைகள் 2588 மாணவர்களைக் கொண்டதாகவும், மன்னார் வலயத்தில் 46 பாடசாலைகள் 3784 மாணவர்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. இந்த நிலையில் குறித்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்ற போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெளிவு படுத்தியுள்ளார்.

மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பஸ் போக்குவரத்து தொடர்பாக அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது

அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம், வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வருகின்ற ஆசிரியர்களுக்காக விசேட பஸ் சேவை ஒன்றையும் ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் -உள்ளூர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்வதற்கு முறையான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்குமாறு அரச தனியார் போக்குவரத்து துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி -எதிர்வரும் 21 ஆம் திகதி முன் பள்ளி பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version