இலங்கை

223 ஆமைகளுடன் மூவர் கைது

Published

on

நீர்கொழும்பு பகுதியில் நான்கு மாடிகளைக் கொண்ட வீடொன்றில் வளர்ப்பதற்கு தடைசெய்யப்பட்ட உயிரினமான 223 நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப் பத்திரம் இன்றி நட்சத்திர ஆமைகளை வைத்திருப்பதற்கோ அல்லது வாகனங்களில் ஏற்றி செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 223 நட்சத்திர ஆமைகளை ரெஜிபோம் பெட்டிகளில் அடைத்து வாகனங்களில் கொண்டு செல்ல தயார் செய்யப்பட்ட நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் இந்தியப் பிரஜைகள் எனவும் ஒருவர் முல்லேரியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகளை மேற்கொண்டு நீர்கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version