இலங்கை

பாணின் விலையும் 5 ரூபாவால் அதிகரிப்பு

Published

on

ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோதுமை மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை அடுத்து இன்று முதல் 10 ரூபாவால் கோதுமை மா விலை அதிகரிப்பதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களின் ஒன்றான செரண்டிப் அறிவித்திருந்தது.

சமையல் எரிவாயுவின் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஒரு இறாத்தல் பாணியின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பு வெளியாகிவில்லை.

இதேவேளை நாளை முதல் சோறு பார்சன், கொத்து பார்சல் , பால் தேநீர், பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் ர10 ரூபாவால் அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version