இலங்கை

யாழ். – கொழும்பு விமான சேவை மீள ஆரம்பம்

Published

on

நாட்டில் கொரோனாப் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்நாட்டு விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு விமான சேவைகளை சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு முன்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்துக்கு வாராந்தம் இரண்டு முறை விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version