இலங்கை

ஆபாச பேச்சுகளுக்கு தடை – விரைவில் சட்டம்

Published

on

நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் ஊடாக உருவாக்கப்படுகின்ற ஆபாச பேச்சுக்களை தடைசெய்வது தொடர்பில் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கென புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க 2020ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கு அமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version