இலங்கை

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ணராமேஸ்வரன் காலமானார்

Published

on

மாவீரர் நாளில்  துயிலுமில்லங்களில் ஒலிக்கப்படும் ‘தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே…’ எனும் உணர்ச்சிகரமான பாடல்  உட்பட பல பாடல்களை பாடிய சங்கீத, மிருதங்க கலாவித்தகர், இசைக் கலைமாமணி வர்ணராமேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

இவர் இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் இசைக்கலைஞராக விளங்கியுள்ளதோடு பல நிகழ்ச்சிகளுக்கும் இசை அமைத்துமுள்ளார்.

போர்ச் சூழல் காரணமாக கனடாவில் புலம்பெயர்ந்து குடியேறிய இவர் அங்கு தமிழிசை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு பல பகுதிகளிலும் இசை வகுப்புக்களையும் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று கனடாவில் காலமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரது தமிழீழ தாயகப் பாடல்கள் சாகா வரம் பெற்று இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version