இலங்கை

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர், மொடோர்னா

Published

on

உயர்கல்வியை மேற்கொள்ள வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தடுப்பூசிகளை பெற வேண்டுமாயின் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் ஏற்றப்படமாட்டாது.

நாராஹேன்பிட்டி மருத்துவமனையில் மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என வெளியாகிய தகவலை அடுத்து அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டனர்.

எனினும் உள்நாட்டு மாணவர்களுக்கு செலுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டபோது அங்கு மாணவர்கள் அமைதியின்மையை தோற்றுவித்தனர்.

இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version