இலங்கை

யாழிலிருந்து கஞ்சா கடத்திய பொலிஸ் அதிகாரி!

Published

on

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற காரில் கஞ்சா கடத்தி செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏ–9 வீதியில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட போது 6 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் நொச்சிகம பகுதியைந்த சேர்ந்த ஒருவரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version