இலங்கை

‘இனப் படுகொலையாளி’ ஜனாதிபதி – நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்

Published

on

‘இனப் படுகொலையாளி’ ஜனாதிபதி – நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 76ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க்கில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இனப் படுகொலையாளி கோத்தபாய ராஜபக்ச என விழித்து அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருந்தார்.

இந்த நிலையில் இனப் படுகொலையாளி கோத்தாபய என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறியுமாறும் அரசியல் எதிரிகளை அடக்குகின்றமையை நிறுத்துமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version