இலங்கை

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை!

Published

on

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கஜேந்திரன் எம்.பி. பிணையில் வந்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலிக்க முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் பொலிஸார் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version