இலங்கை

ஜப்பானில் வேலைவாய்ப்பு! – ஜனவரியில் தேர்வு

Published

on

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இதற்காக தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாதியம் மற்றும் உணவு வழங்கல் ஆகிய துறைகளுக்கான தகுதி காண் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை மற்றும் பரீட்சை கட்டணம் பற்றிய தகவல்களை www.slbfe.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.

விண்ணப்பங்களுக்கான அழைப்பு மற்றும் தேர்வு மையங்கள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version