இலங்கை

வீதியில் நின்ற இளைஞர்கள் மீது வாள்வெட்டு! – இணுவிலில் சம்பவம்

Published

on

யாழ்ப்பாணம்  – இணுவில் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்கள் மீது வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம்  நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இணுவில் காரைக்கால் சிவன் கோயிலடியில் அதே இடத்தைச் சேர்ந்த இருவர் கதைத்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் வந்த 5 பேர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version