இலங்கை

வட்டுக்கோட்டையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில்

Published

on

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற  தாக்குதல் சம்பவத்தில், தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை – முதலியார் கோவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரவு 7 மணியளவில் முதலியார் கோவில் பகுதிக்கு வந்த குழு ஒன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது  தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு கதவு, ஜன்னல், வேலி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் 1990 நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சந்தேகநபர்கள் இருவரை கைத செய்துள்ளதுடன் 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version