இலங்கை

மதுபானசாலைகள் திறப்பு! – கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Published

on

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் இருபது பேர் வரை இணைந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பொதுமக்கள் கடும் கஷ்ட நிலையில் உள்ள இந்த நேரத்தில், மதுபான நிலையங்கள் அத்தியாவசிய சேவையா?

நடைபாதை வர்த்தகர்கள் போன்றோர் தவிக்கும் நிலையில் மதுபானசாலைகள் திறந்தமை கண்டிக்கத்தக்கது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க முடியாது என அறிவித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோஷங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் இருவரை பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version