இலங்கை

திருவலையால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி! – அரியாலையில் சம்பவம்

Published

on

கணவன்– மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவலை கட்டையால் அடித்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது–32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் இவர் மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவருகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அதிகாலை வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த குடும்பப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உடலில் திருவலைக் கட்டையால் தாக்கப்பட்ட 5 க்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version