இலங்கை

கறுப்பு பூஞ்சை நோயை கண்டறிய வசதியில்லை!

Published

on

கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண மற்றும் அவர்களிடம் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி போதுமான அளவில் இல்லை என எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் அறிகுறியானது மூக்கின இருபுறமும் கருமையாவதுடன் கண்களைச் சுற்றி கறுப்புப் பூஞ்சை பரவுவதும் ஆகும்.

இந்த நோயைக் கண்டறிய எம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை வளங்களே காணப்படுகின்றன. இதற்கான சோதனைகளை மேற்கொள்ள எம்மிடம் போதியளவு வசதிகள் இல்லை.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அறுவை சிகிச்சை சாத்தியம் உள்ளது. ஆனால் இந்த நோயைக் கண்டறிய திசு சோதனை தேவைப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதால் இந்த கரும்பூஞ்சை ஏற்பட வாய்ப்புண்டு எனவும் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version