இலங்கை

மதுபான சாலைகள் திறப்பு! – அலைமோதும் மக்கள் கூட்டம்

Published

on

மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரங்கை அடுத்தமாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு கலால் வரி திணைக்களம் அனுமதியளித்துள்ளது.

அதன்படி இன்று அனுமதி வழங்கப்பட்ட உடனே நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் திறக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைகள் திறக்கப்பட்ட கொஞ்ச நிமிடங்களிலேயே மதுபானசாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானப் போத்தல்களை பெற்றுசெல்கின்றனர் நுகர்வோர்.

அத்துடன் மதுபான நிலையங்கள் அருகில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் மக்கள் கூட்டமாக மதுபானங்களை வேண்டிச் செல்கின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version