இலங்கை

மின்சார சபைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி!

Published

on

மின்சார சபைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி!

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின் பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின்சாரசபை பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது என மின்சார சபை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்டணத்தை செலுத்த பாவனையாளர்களை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவே இன்னும் இரண்டு அல்லது 3 மாதங்கள் சென்றால் நாம் கடுமையான பொருளாதார பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சுமார் 44 பில்லியன் ரூபா மின்கட்டணம் அறவிடப்படவுள்ளது.

கட்டணம் செலுத்தக் கூடியவர்களும் கட்டணம் செலுத்தாமையே இந்தப் பிரச்சினைக்கு காரணம் எனவும் முடிந்தளவு மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version