இலங்கை

கொடிகாமம் விபத்தில் இளைஞன் பலி!

Published

on

யாழ். கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கொடிகாமம் கோயிலாமனை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ராஜன் சிந்துஜன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இளைஞர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version