இலங்கை

கொரோனா தொற்று 2,641 – சாவு 144

Published

on

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று 144 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 77 ஆண்களும் 67 பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேரும் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 21 பேரும் 30க்கு கீழ்பட்டோரில் ஒருவருமே கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம் 2 ஆயிரத்து 641 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 77 ஆயிரத்து 421 ஆக உயர்வடைந்துள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version