இலங்கை

கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு!

Published

on

கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு!

கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தலா 5 ஆயிரம் ரூபா அடிப்படையில் நிதி ஒதுக்கபட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் சடல தகனத்துக்கு 1 கோடியே 20 லட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சுக்குரிய தகன சாலைகளின் செலவீனத்தை பெற்றுகொடுக்கும் முகமாகவே இந்த நிதியை ஒதுக்கீடுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை தகனம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 417 சடலங்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – என்றார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version