இலங்கை

புதுக்குடியிருப்பில் 5 பேருக்கு டெல்டா!

Published

on

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா தொற்றுடன் 5 பேர் இனம்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி வடக்கு மாகாணத்தில் 113 பேருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குறித்த மாதிரிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரின் மாதிரிகள் டெல்டா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளன.

குறித்த ஐவரில் பொலிஸார் இருவரும் பிரதேசவாசிகள் மூவரும் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version