இலங்கை

நிவாரணம் வழங்குக! – தனியார் பஸ் உரிமையாளர்கள் போர்க்கொடி

Published

on

தமக்கு உடனடியாக நிவாரணம் வழங்காவிடின் ஊரடங்கு நீக்கப்படினும் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமாட்டோம் என தனியார் பஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடக சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக பஸ்கள் இயக்கப்படாமையால் 50 ஆயிரம் பஸ் ஊழியர்களும் 11 ஆயிரம் பஸ் உரிமையாளர்களும் எந்தவித வருமானமும் இன்றி மோசன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களின் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தனியார் பஸ் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஊரடங்கு நீங்கிய பின்னரும் பஸ்கள் இயங்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version