இலங்கை

அச்சுவேலி – மணமக்களுக்கு எதிராக வழக்கு!

Published

on

அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சுகாதார விதிமுறைகளை மீறி நிகழ்வு நடைபெற்றுள்ளது என பொலிஸாரால் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண நிகழ்வில் பங்கேற்றோரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனாத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியுள்ளனர் என பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அத் திருமண நிகழ்வுக்கு சென்ற பொலிஸார் விருந்தினரை வெளியேறுமாறு பணித்து மணமக்களுக்கும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் கொரோனாத் தொற்று சோதனை மேற்கொள்ள பணித்துள்ளனர்.

அத்துடன் சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அச்சுவேலி பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version