இலங்கை

யாழ். வருகிறார் நாமல்!

Published

on

நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை கண்காணிக்க இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகின்றார்.

அதன்படி நாளை 9ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள  நாமல் ராஜபக்ச அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றைத் துரிதப்படுத்தும் நோக்கில் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், நாமலில் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version