இலங்கை

போக்குவரத்தில் விசேட திட்டம்!

Published

on

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நிறைவடைவதற்கு முன் பொதுப் போக்குவரத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மீண்டும் நாட்டை திறக்க முன்னர் பொதுப் போக்குவரத்தில் தீர்மானமிக்க வேலைத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

நாட்டில் தொற்று வேகமாக பரவ பொதுப்போக்குவரத்து சேவையே முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் நாடு மீளத் திறந்த பின் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த செயற்பாடு அமைய வேண்டும்.

நாட்டை திறப்பதற்கு முன்னர் இந்தச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தினால் தொற்றின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version