இலங்கை

நாட்டில் தொற்று – 3,333 சாவு – 145

Published

on

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் நாட்டில் 145 உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 951  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று கொரோனாத் தொற்றாளர்கள் 3 ஆயிரத்து 333 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை தொற்றில் இருந்து 3லட்சத்து 82 ஆயிரத்து 476 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version