இலங்கை

பராலிம்பிக் – இலங்கைக்கு முதல் தங்கம்

Published

on

டோக்கியோவில் இடம்பெற்றுவரும்  பராலிம்பிக்  2020 போட்டிகளில் இலங்கை முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளின் திறன்களை வெளிப்படுத்தும் 16 ஆவது பராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியில் 162 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றினர். இலங்கை சார்பாக 9 வீரர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்து இலங்கை சார்பாக முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவர் 67.79 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version