இலங்கை

மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!

Published

on

மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!

நுவரெலியா பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

மருத்துவர்கள் 3 பேர், தாதியர்கள் 13, கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் 7 பேர் என மொத்தமாக 23 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும், கொரோனாத் தொற்றுக்குள்ளான மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட கனிஷ்ட ஊழியர்கள் சிலர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த அறிகுறிகள் உள்ள சிலர் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எவ்வாறாயினும் தற்போதுள்ள மருத்துவர்கள், தாதியர்களைக் கொண்டு பணிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version