இந்தியா

5 தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை!!

Published

on

ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய இருவேறு என்கவுண்டர் சம்பவங்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா , ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை ஜம்மு காஷ்மீர் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குட்கா மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் அங்கு தங்கியிருந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டர் பயங்கரவாதி அத்வானி முக்கியமானவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதத்தில் மட்டும் இதுவரை நடைபெற்ற 11 என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

#WorldNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version