இந்தியா

கணவனின் தலையை வெட்டியெடுத்து பொலிஸ் நிலையம் சென்ற பெண்!!!

Published

on

கணவனின் கழுத்தறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திரப்பிரதேசம்- சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவனை மனைவி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.

ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 53) மற்றும் அவரது மனைவி வசுந்தரா (வயது 50).

குறித்த தம்பதியிடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நீடித்ததாகவும், அவர்களிடையே வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவனை, மனைவி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளதுடன், கணவனின் தலையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரத்தக் கறைகளுடன் குறித்த பெண் செல்வதை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதை கண்டறிந்துள்ளனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தம்பதிக்கு 20 வயதில் மகன் உள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version