இந்தியா

ஆடு என நினைத்து ஆட்டைப் பிடித்தவரின் தலையை வெட்டிய கொடூரம்!

Published

on

ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்தவரின் தலையை வெட்டிய சம்பவம் ஆந்திரவில் இடம்பெற்றுள்ளது.

ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுப்பது அங்கு வழமையான ஒன்றாக உள்ளது. இந்தநிலையில் அப்பிரதேசவாசிகள் எல்லம்மா கோவிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை நேற்று (17) பலிகொடுத்தனர்.

அப்போது பலிகொடுப்பதற்காக ஆடு ஒன்றை 35 வயது இளைஞர் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், மது அருந்தி முழுபோதையில் இருந்த ஆடு வெட்டுபவர் குறித்த இளைஞனின் தலையை வெட்டியுள்ளார். இதனையடுத்து படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version