இந்தியா
மர குடோனில் தீ விபத்து: இருவர் காயம்
மர குடோன் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ அனர்த்தம் காரணமாக, குடோன் முற்றிலும் எரிந்து நாசமடைந்துள்ளது. மேலும் அங்கிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வனர்த்தம் இடம்பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையினையும் மேற்கொண்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login