இந்தியா
பாரவூர்தி மோதி பேருந்து கவிழ்ந்த விபத்து:10 பேர் காயம்!
கோவை அருகே பாரவூர்தி மோதி அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று (27) காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த பாரவூத்தி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 10 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து சிறுமுகை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login