இந்தியா

ஆற்றில் மூழ்கிய சிவன் கோவில் – பூஜை செய்யும் நேரம் மட்டும் வரும் வெள்ளம்

Published

on

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், கொத்தப்பள்ளி அருகே கிருஷ்ணா ஆற்றின் நடுவில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் சிவன் கோவில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. சிவன் கோயில் தண்ணீரில் மூழ்கியதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சிவன் கோவில் மெல்ல மெல்ல வெளியே தெரிகிறது. இதையடுத்து கோவில் பூசாரி ராகவா சர்மா படகில் சென்று சாமிக்கு பூஜைகள் செய்கிறார்.

சாமிக்கு பூஜை செய்ய செல்லும்போது மட்டும் மூலவர் தெரியும் அளவு தண்ணீர் வற்றி விடுவதாகவும் பூஜைகள் செய்து முடித்து வெளியே வந்த பிறகு கருவறையை தண்ணீர் சூழ்ந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மகா சிவராத்திரிக்குள் கோவிலை சுற்றி தண்ணீர் வற்றிவிடும் என நம்பப்படுகிறது.

#India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version