இந்தியா

லாரியை மடக்கி 1.36 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் கொள்ளை

Published

on

இந்தியா – மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி இன்று அதிகாலை சிகரெட் பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கொள்ளையர்களிடம் சிக்கிக்கொண்டது.

மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் காரில் வந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் குறித்த லாரியை வழிமறித்து சாரதியை தாக்கியதுடன், சாரதியின் கண்களை மூடிவிட்டு கொள்ளையர்களின் ஒருவன் லாரியை ஓட்டிச் சென்றுள்ளான்.

இதையடுத்து, அதிலிருந்த பொருட்களை வேறு வாகனத்திற்கு மாற்றிய பிறகு லாரியை கைவிட்டு சாரதியை சரோட்டி சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு ரூ. 1.36 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#india

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version