இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவியேற்கிறார் இசைஞானி இளையராஜா

Published

on

இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவி ஏற்க உள்ளார்.

விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், கடந்த திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜா பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில், நாளை பதவியேற்பதற்காக அவர் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India

Exit mobile version