இந்தியா

திடீர் மின்வெட்டு! – டோர்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்

Published

on

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் அடிக்கடி திடீர் மின்வெட்டு இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆந்திராவின் அரச மருத்துவமனையில் தொலைபேசி டோர்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்திலுள்ள அரச மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது.

இதன்போது சாமர்த்தியமாக செயற்பட்ட மருத்துவர்கள், தமது தொலைபேசியின் டோர்ச் லைற்றை அடித்து, அந்த வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துள்ளனர்.

இந்த செய்தி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version