இந்தியா
3,887 கோடி செலவில் போர் ஹெலிகாப்டர்கள் கொள்வனவு!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலக்கு ரக போர் ஹெலிகாப்டர்களை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது.
இன்றையதினம் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே குறித்த ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தல் தயாரிக்கப்பட்டு இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,887 கோடி வழங்கப்படவுள்ளது.
You must be logged in to post a comment Login