அரசியல்

திராவிட இயக்கத்தைக் கட்டிக் காக்க முன்வாருங்கள்! – இளைஞர்களுக்கு வைகோ அழைப்பு

Published

on

“திராவிட இயக்கம் தொடர்ந்து செயற்படுகின்றது. இதைத் தொடர்ந்து இளைஞர்கள் கட்டிக் காக்க வேண்டும்.”- இவ்வாறு ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

ஈரோடு சூரம்பட்டி நால் வீதியுள்ள புதுப்பிக்கப்பட்ட ம.தி.மு.க.அலுவலகம் திறக்கப்பட்டது. மாநகர மாவட்ட ம.தி.மு.க செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வைகோ மேலும் தெரிவித்ததாவது:-

“தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர்.கலைஞர் மற்றும் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் கட்டிக்காத்து வரும் திராவிட இயக்க பாசறையில் இந்துத்துவா சனாதன அமைப்புகள் ஊடுருவ முயற்சிக்கின்றன.

இந்த ஊடுருவலைத் தடுக்க இளைஞர்கள் அதிகம் வர வேண்டும். பெரியாரின் சிந்தனைகளை, அண்ணாவின் கொள்கைகளை, கலைஞரின் எழுத்துக்களை இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும். திராவிட பாசறைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் சனாதன சக்திகளை முறியடிக்க வேண்டும்” – என்றார்.

#IndiyanNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version