செய்திகள்

கப்ராலைப் பதவி விலகுமாறு கோரவில்லை! – கோட்டா தெரிவிப்பு

Published

on

“மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைப் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதாரச் சவால்களை வெற்றிகொள்வதில் பலமான ஒரு சக்தியாக அவர் செயற்படுவார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு, அதிகாரிகள் பற்றி கலந்துரையாடவில்லை. மத்திய வங்கியின் ஆளுநர் கப்ராலும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், நிதிப் பிரச்சினைகள் மட்டுமே கலந்துரையாடப்பட்டன.

இது போன்ற பொய்யான மற்றும் போலியான அறிக்கைகளால் மனம் தளராமல், நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக அவரின் அனைத்து முக்கிய பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு, நான் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ராலுக்குத் தனிப்பட்ட முறையில் அறிவித்திருக்கின்றேன்” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version