செய்திகள்

பங்காளிக் கட்சிகள் இணைந்து மிகப்பெரும் மே தின பேரணி!

Published

on

மே தினக் கூட்டத்தை பெருமெடுப்பில் நடத்துவதற்கு 11 அரச பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அரசுக்கு எதிராக ‘விமல் சூறாவளி’ எனும் தொனிப்பொருளிள் இம்மாதம் 27 ஆம் திகதி பாரிய கூட்டமொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இதற்கு சில தரப்புகள் உடன்படாததால் கூட்டம் கைவிடப்பட்டது.

எனினும், மே தினத்தை பெருமெடுப்பில் நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உடன்பட்டுள்ளது. இதற்கு ஏனைய கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

எனவே, மே தின கூட்டம் மற்றும் பேரணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு விரைவில் குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version