செய்திகள்

எரிபொருள் வழங்குவது உடன் நிறுத்தம்!

Published

on

நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

பீப்பாய்கள் மற்றும் போத்தல்கள் ஆகியவற்றில் வாகனங்களுக்கு மேலதிகமாக பெற்றோல் மற்றும் டீசல் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய நிர்வாகி மகேஷ் அலவத்த தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்திற்கு முரணாக செயற்படும் விற்பனையாளர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version