செய்திகள்

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்!!

Published

on

வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் தூதரகத்துக்கு அருகில் உள்ள டெலிவி‌ஷன் அலுவலக கட்டிடமும் பலத்த சேதமானது.

பக்கத்து நாடான ஈரானில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடாத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

மிருகத்தனமான இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல்இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews

 

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version