செய்திகள்

அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பில் இன்று!

Published

on

அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.

‘நாடு நாசம், மீட்டெடுப்போம்’ – எனும் தொனிப்பொருளிக்கீழ் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், மக்களும், கட்சி ஆதரவாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் மக்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பும் சடுதியாக குறைவடைந்துள்ளது. பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, இவற்றை சீர்செய்வதற்கு அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படவுள்ளது. இன்றைய போராட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும்.

குறித்த காலக்கெடுவுக்குள் தீர்வு இல்லையேல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version